இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Maanidanaai Pirandhaar

இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

மேய்ப்பர்கள் ராவினிலே – தங்கள்
மந்தையை காத்திருக்க
தூதர்கள் வானத்திலே - தோன்றி
தேவனை துதித்தனரே

ஆலோசனை கர்த்தரே - இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு - சர்வ
வல்லவர் பிறந்தனரே

மாட்டுத் தொழுவத்திலே – பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் – அவர்
ஏழ்மையின் பாதையிலே

பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே - வான
சாஸ்திரிகள் பணிந்தனரே

அன்னாளும் ஆலயத்தில் - அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே - கூறி
தூயனைப் புகழ்ந்தனரே

யாக்கோபில் ஓர் நட்சத்திரம் - இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே - நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்

No comments:

Post a Comment